Monday, August 13, 2007

பாரதமே...

பாரில் சிற்ந்த பாரதமே-என்
புலம்பல் கேளாய் பாரதமே.
பன்பினை தந்த பாரதமே-அதை
போற்ற மறந்திட்டார் பாரதமே.
மதி நுட்பம் வளர்ந்தது பாரதமே-அதில்
நேசம் மறைந்தது பாரதமே.
செல்வம் பெருகிற்று பாரதமே-கொடை
குனமது குன்றிற்று பாரதமே.
நட்பு மறைந்தது பாரதமே-நிலச்
சன்டைகள் மூன்டது பாரதமே.
அன்பு நசிந்தது பாரதமே-வன்முறை
மூன்டது நின் பூமியிலே.
சுதந்திரம் கொண்டாடும் பாரதமே-எந்த
சாதனையை சிரத்தினில் சூடிக் கொள்வாய்???

நிலமகள்...

நான் மன்னை தொட்ட நொடியில்
நின் மடியில் வாங்கிக் கொண்டாய்
உயிர் உடலைப் பிரிந்து போனாலும்
என் உடலைப் புதைத்துக் கொள்வாய்.
நஞ்சை இன்றி போனாலும்
என் வாஞ்சை உன் மேல் மாறாது
நதிகள் வற்றிப் போனாலும்
என் நேசம் உன் மேல் மாறாது
உயர் பன்பு என்றும் குறையாது
தழல் வீரம் என்றும் மறையாது
துன்பம் பல நீ சுமந்து நின்றாலும்
அன்பை அளவின்றி அள்ளித் தெளிக்கும்
நின் மடியில் வாழ்வதற் கினையேது.

சுதந்திரம்-ஒரு குடிமகனின் கருத்தில்...

ஏற்ற இரக்கங்களிள் சிக்கித் தவித்து
நண்பனின் வஞ்சத்தில் நெஞ்சம் நசிந்து
பொருளாசையின் பிடியில் வளமெள்ளாம் தொலைந்து
வருமையின் பிடியில் வாடித் துவண்டு
என் வாழ்வை போலானது நின் சுதந்திரம்.